காப்பியத்தமிழ்
குதிரிப் படலம் அறுசீர்க்கழிநெடிலடி யாரிரிய விருத்தம் கொற்றவெண் கவிகை நிழ லுலகெலாங் குளிரச் செய்து வெற்றிகொண் டிகலா மோங்க விறனபி யிருக்கு நாளில் பற்றலர் நேயந் தோறும் பற்பல்கா லிருந்து சாவு மொற்றரி லொருவர் தோன்றிச் சிலமொழி யுரைப்ப தானார். 1(3665) நாயகம் நபிகட் (இ-ள்) வலிமை பொருந்திய நமது பெருமானார் சூபி செய்யிதுல் குறைஷியா காத்திமுல் (அன்பியா முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் வெற்றியைக் கொண்ட வெள்ளிய சந்திரவட்டக் குடையினது நிழலினால் இவ்வுலக முழுவதையுங் குளிரப் பண்ணித் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கமானதும்) வளரும்படி விஜயத்தைப் பெற்று உறைகின்ற காலத்தில், சத்துராதிகளான காபிர்களது நகரங்க ளெல்லாவற்றிலுந் தங்கிப் பற்பல தடவை அச்சத்துராதிகளது யோசனைகளைக் கேட்டுத் தெரிகின்ற தூதர்களில் ஒரு தூதர் வந்து சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினார். தும் மதீனமா நகரிற் றென்கீழ்த் திசையினில் வளமை யோங்கக் குதிவரால் வனச வாவி சூழ்தரு குதிரி யென்னும் பதிபனீ சுலைமுக் கூட்டத் தாரினிற் பல்லர் கூண்டு விதிமுறை மறையின் மாற்றம் பொய்யென வெறுத்து மன்னோ. 2(3666) (இ-ள்) (இந்தத் த...